கிரிக்கெட்: செய்தி
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய தலைவராக முன்னாள் இந்திய உள்நாட்டு கிரிக்கெட் வீரரான ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மிதுன் மன்ஹாஸ் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானுடனான இறுதிப் போட்டிக்கு முந்தைய போட்டோஷூட்டை நிராகரித்தார் சூர்யகுமார் யாதவ்
ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்தியா vs பாகிஸ்தான் அணிகளின் கேப்டன்கள் கலந்துகொள்ளவிருந்த பாரம்பரியப் போட்டோஷூட்டில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கலந்துகொள்ள மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தந்தையை இழந்த இலங்கை வீரர் துனித் வெல்லாலகேவுக்காக சூர்யகுமார் யாதவ் செய்த உருக்கமான செயல்
நடந்துவரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், இளம் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகேவுக்கு மிகவும் கடினமான காலமாக அமைந்துள்ளது.
டி20 வடிவ ஆசிய கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி குல்தீப் யாதவ் வரலாற்றுச் சாதனை
இலங்கைக்கு எதிரான பரபரப்பான சூப்பர் ஃபோர் ஆட்டத்தைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், டி20 ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையைப் படைத்து சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
சூர்யகுமார் யாதவுக்கு போட்டி ஊதியத்தில் 30 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி உத்தரவு
இந்தியா vs பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு பேசியதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு அவருடைய போட்டி ஊதியத்தில் 30% அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
வரலாற்றுச் சாதனை: 400 ரன்களுக்கு மேல் சேஸ் செய்து ஏ டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி வெற்றி
லக்னோவில் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்தியா ஏ அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
துப்பாக்கி சைகைக்கும் அதற்கும் தொடர்பில்லை; பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஐசிசியிடம் விளக்கம்
ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியின்போது தான் செய்த கொண்டாட்டம், அரசியல் உள்நோக்கம் கொண்டதல்ல என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹான், வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) அன்று நடைபெற்ற ஐசிசி விசாரணையில் விளக்கம் அளித்தார்.
ஐசிசி விசாரணையில் சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன? விவரங்கள்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) விசாரணையில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 'தான் குற்றவாளி அல்ல' என்று தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை: இன்று இந்தியா - இலங்கை மோதல்; இறுதிப் போட்டிக்கான பயிற்சியில் இந்திய அணி
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில், இன்று இரவு இந்தியா மற்றும் இலங்கை அணிகள் துபாயில் மோதுகின்றன.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புகார் குறித்து சூர்யகுமார் யாதவ் ஐசிசி விசாரணையில் ஆஜராகி விளக்கம்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அளித்த புகாரின் அடிப்படையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் முன் வியாழன் (செப்டம்பர் 25) அன்று நடைபெற்ற விசாரணையில் பங்கேற்றார்.
ரிஷப் பண்ட் இந்திய அணிக்குத் திரும்புவது எப்போது? தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் சொன்னது இதுதான்
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், காயம் காரணமாக தொடர்ந்து அணியில் இடம்பெறாத நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் மீண்டும் களமிறங்குவார் என்று இந்தியத் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக பிசிசிஐ ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஐசிசிக்கு புகார்
துபாயில் நடந்த ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டிக்குப் பிறகு, இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான பதட்டங்கள் களத்தை விட்டு புதிய பரிமாணம் எடுத்துள்ளன.
சிவப்பு பந்து கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு கோருகிறார் ஷ்ரேயாஸ் ஐயர்: விவரங்கள்
ஒரு பெரிய முன்னேற்றத்தில், இந்திய பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்ச்சியான முதுகு விறைப்பு மற்றும் சோர்வு காரணமாக சிவப்பு பந்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு கோரியுள்ளார்.
ஆசிய கோப்பை 2025: INDvsPAK சூப்பர் 4 டாஸ் நிகழ்வில் சல்மான் ஆகாவை கண்டுகொள்ளாத சூர்யகுமார் யாதவ்
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டிக்கு முன்னதாக, டாஸ் போடும் நிகழ்வின்போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவை கண்டுகொள்ளாமல் தவிர்த்தார்.
ஆசிய கோப்பை 2025: INDvsPAK சூப்பர் 4 சுற்று போட்டியில் டாஸ் வென்றது இந்தியா; பாகிஸ்தான் முதலில் பேட்டிங்
ஆசிய கோப்பை 2025 இல் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) நடைபெற உள்ள சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.
அவர்கள் யாருமே கிடையாதாம்; முன்னாள் உள்நாட்டு கிரிக்கெட் வீரர் மிதுன் மன்ஹாஸ் பிசிசிஐ தலைவராக வாய்ப்பு
முன்னாள் டெல்லி கிரிக்கெட் வீரர் மிதுன் மன்ஹாஸ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக சதம்; விராட் கோலியின் 12 வருட சாதனையை முறியடித்தார் ஸ்மிருதி மந்தனா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் (ODI) அதிவேக சதம் அடித்த இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்தார் பாகிஸ்தான் கேப்டன்
ஆசிய கோப்பை 2025 இல் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான சூப்பர் 4 போட்டிக்கு முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சல்மான் அகா மீண்டும் போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பைத் தவிர்த்துள்ளார்.
ஆசிய கோப்பை 2025: சூப்பர் 4 சுற்று ஆட்டத்திலும் பாகிஸ்தானுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மாட்டார்களா? சூர்யகுமார் யாதவ் விளக்கம்
ஆசிய கோப்பை 2025 சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வரும் நிலையில், அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீண்டும் கவனம் பெற்றுள்ளார்.
டி20 சர்வதேச போட்டிகளில் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்தியர்; அர்ஷ்தீப் சிங் சாதனை
இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், டி20 சர்வதேசப் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
ஆசிய கோப்பை 2025: சூப்பர் ஃபோர் அட்டவணை, இடங்கள், நேரங்கள் மற்றும் விவரங்கள்
2025 ஆசியக் கோப்பையின் சூப்பர் ஃபோர் நிலை சனிக்கிழமை இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் தொடங்கும்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் உரிமையை அப்பல்லோ டயர்ஸ் வென்றது
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் உரிமையை 2027 வரை அப்பல்லோ டயர்ஸ் பெற்றுள்ளது.
WPL 2026 ஜனவரியில் தொடங்க உள்ளது: விவரங்கள் இங்கே
கிரிக்பஸின் அறிக்கையின்படி, 2026 மகளிர் பிரீமியர் லீக் (WPL) சீசன் ஜனவரி தொடக்கத்தில், முந்தைய பதிப்புகளை விட மிகவும் முன்னதாகவே தொடங்க உள்ளது.
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்காதது சரிதான்; சூர்யகுமார் யாதவிற்கு சவுரவ் கங்குலி ஆதரவு
ஆசிய கோப்பை 2025 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பிறகு, இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
'கைகுலுக்காம போய்ட்டாங்க'; ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் இந்திய அணி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார்
ஆசிய கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான தோல்விக்குப் பின்னர், இந்திய வீரர்கள் தங்களுடன் கைகுலுக்க மறுத்ததாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளது.
Asia Cup: இந்தியாவின் வெற்றியை பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமர்ப்பித்த SKY
துபாயில் நடந்த சர்ச்சைக்குரிய ஆசிய கோப்பை போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் இந்தியாவை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.
ஆசிய கோப்பை 2025 INDvsPAK: டாஸ் வென்றது பாகிஸ்தான்; இந்தியா முதலில் பந்துவீச்சு
இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை 2025 குழு நிலை ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெறுகிறது.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வீராங்கனையை விஞ்சி ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, மகளிர் ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்தின் ஏமி சாட்டர்வெய்ட்டை முந்தி, ஏழாவது அதிக ரன்களைக் குவித்த வீராங்கனையாக புதிய சாதனை படைத்துள்ளார்.
பிசிசிஐ தலைவர் பதவிக்கு ஹர்பஜன் சிங் நியமனமா? பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் முன்மொழிவு என தகவல்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவிக்கான தேர்தலில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் போட்டியிடலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள்; இந்தியாவின் சாதனையை முறியடித்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட்டில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
பிசிசிஐ தலைவர் பதவிக்கான போட்டியில் சச்சின் டெண்டுகள் இருக்கிறாரா? உண்மை இதுதான்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவிக்குத் தான் பரிசீலிக்கப்படுவதாகப் பரவி வரும் வதந்திகளை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளார்.
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டிக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
உச்ச நீதிமன்றம், ஆசிய கோப்பைத் தொடரில் இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டிக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க வியாழக்கிழமை (செப்டம்பர் 11) மறுத்துவிட்டது.
ஆசிய கோப்பை 2025: சிறப்பாக செயல்பட்ட குல்தீப் யாதவ் அடுத்த போட்டியில் சேர்க்கப்பட மாட்டாரா?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இந்தியத் தேர்வுக்குழுவின் கொள்கையை நகைச்சுவையாக விமர்சித்துள்ளார்.
மருத்துவமனைக்கு சென்ற ரோஹித் சர்மா; ரசிகர்கள் கவலை
இந்திய அணியின் தற்போதைய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நேற்று இரவு மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் காணப்பட்டார்.
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட வாய்ப்பு; ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித் ஷர்மாவுக்கு ஃபேர்வெல்?
இந்திய கிரிக்கெட்டின் அடுத்த ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்த எந்த டி20யிலும் இந்திய அணி தோற்றதில்லை; ஆசிய கோப்பையில் வாய்ப்புக் கிடைக்குமா?
செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்க உள்ள ஆசிய கோப்பைத் தொடரில், விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
செப்டம்பர் 28 இல் பிசிசிஐ வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு; புதிய தலைவர் மற்றும் ஐபிஎல் சேர்மன் தேர்வு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) வருடாந்திர பொதுக்கூட்டம் (AGM) செப்டம்பர் 28ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிப்பு; ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமனம்
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான பல வடிவ கிரிக்கெட் தொடருக்கான இந்திய ஏ அணி, பிசிசிஐயால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை 2025: இந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் 12 இந்திய வம்சாவளி வீரர்கள்; முழு விபரம்
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை 2025 போட்டியில் பங்கேற்க தயாராகி வருகிறது.
பிசிசிஐயின் தலைவராக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் நியமிக்கப்பட வாய்ப்பு: பரபரப்புத் தகவல்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயில் மற்றொரு தலைமை மாற்றம் ஏற்படவுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; விசித்திரமான சாதனை படைத்தது கனடா அணி
சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை நடந்திராத ஒரு விசித்திரமான சம்பவம், ஸ்காட்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கனடா அணிக்கு நடந்தது.
இந்திய அணியின் மூத்த லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
25 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு, இந்திய அணியின் அனுபவமிக்க லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி 2.0: ஐபிஎல் போட்டிகளை பார்ப்பதற்கு இனி அதிகம் செலவு செய்ய வேண்டும்; புதிய வரி எவ்வளவு?
கிரிக்கெட் ரசிகர்கள் இனி ஐபிஎல் போட்டிகளை மைதானத்தில் நேரடியாகக் காண அதிக பணம் செலவழிக்க நேரிடும்.
ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கில் அஸ்வின் ரவிச்சந்திரன் இடம்பெறுவாரா?
முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் விரைவில் ஆஸ்திரேலியாவின் முதன்மையான டி20 லீக்கான பிக் பாஷ் லீக்கில் (BBL) அறிமுகமாகலாம்.
டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் அறிவிப்பு
ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தவும், 2027 ஆண்கள் ஒருநாள் உலகக் கோப்பைக்கு தான் உச்ச நிலையில் இருப்பதை உறுதி செய்யவும், மிட்செல் ஸ்டார்க் சர்வதேச Twenty20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஆண்கள் உலகக்கோப்பையை விட அதிகம்; மகளிர் உலகக்கோப்பைக்கான பரிசுத் தொகையை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தியது ஐசிசி
ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025 போட்டிக்கான மொத்தப் பரிசுத் தொகையை $13.88 மில்லியன் (சுமார் ₹122.5 கோடி) ஆக உயர்த்தி அறிவித்துள்ளது.
ரசிகர்கள் பாதுகாப்புக்கான ஆறு அம்ச அறிக்கையை வெளியிட்டது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
கடந்த ஜூன் மாதம் நடந்த துயரமான கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி, ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு அளிக்கவும் ஒரு விரிவான ஆறு அம்ச அறிக்கையை வெளியிட்டுள்ளது.